Friday 17th of May 2024 11:30:31 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்- குறிகட்டுவான் பாதையினை சீரமையுங்கள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை  கோரிக்கை!

யாழ்- குறிகட்டுவான் பாதையினை சீரமையுங்கள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை கோரிக்கை!


நிதி மூலதன, சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துக்கு வருகை தந்து கல்வியியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது கருத்துரைத்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் முன்னாள் துணைவேந்தருமான பொன் பாலசுந்தரம்பிள்ளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகங்களில் சில கட்டிட தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது குறிப்பாக பொறியியல் பீடம் மற்றும் சித்த மருத்துவபீடம் மற்றும் மருத்துவபீடத்தில் சில கட்டிட தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. அத்தோடு அதற்குரிய பெருமளவு நிதி முதலீடுகளும் தேவைப்படுகின்றது அதனை மிக விரைவில் பெற்றுத் தர வேண்டும்.

குறிப்பாக இம்முறை வெசாக்தினமானது யாழ்ப்பாணத்தில் நயினாதீவிலுள்ள நாக விகாரையில் கொண்டாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் யாழிலிருந்து குறிகாட்டுவான் வரையான பாதை மிகவும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

நீண்ட காலமாக குறித்த பாதையினை சுற்றுலா பயணிகளும் தென்னிலங்கை மக்களும் பயன்படுத்தும் நிலையில் நீண்ட காலமாக குறித்த விதியானது சீர் செய்யப்படாத நிலை காணப்படுகின்றது. அதேபோல காரைநகர் யாழ்ப்பாணம் பாதையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற பாதையானது சீரமைக்கப்படாமை மிகவும் வருத்தம் அளிக்கின்றது.

அத்தோடு யாழ்ப்பாண குடா நாட்டை பொருத்தவரை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற வெங்காயம் மமிளகாய் போன்ற உற்பத்தி பொருட்களுக்கு தரமான விலையினை பெற்றுக்கொடுப்பது வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

குறிப்பாக தென்னிலங்கை மற்றும் வட பகுதிக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று குறித்த உற்பத்தி பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார் .

அத்தோடு வடக்கில ஆடு வளர்ப்பு தொடர்பில் அரசாங்கம் கரிசனை செலுத்த வேண்டும் அதாவது வடக்கு மாகாணத்தில் உள்ள ஆட்டு இறைச்சியைப் போல இலங்கையில் எந்த பாகத்திலும் சுவையானதாக இல்லை.

எனவே வடக்கு மாகாணத்தில் ஆடு வளர்ப்பு தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறை செலுத்துதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE